Sunday 5th of May 2024 12:05:04 AM GMT

LANGUAGE - TAMIL
கோப்பு படம்!
டெல்டா அபாயம் காரணமாக இலங்கை மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியது ஜப்பான்!

டெல்டா அபாயம் காரணமாக இலங்கை மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியது ஜப்பான்!


டெல்டா வகை திரிபு வைரஸ் தொற்று பரவல் அபாயம் காரணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீக்க ஜப்பான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நாளை (20) முதல் இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

டெல்டா கொவிட் திரிபு அவதானத்தை கருத்திற் கொண்டு கடந்த ஜூன் மாதம் ஜப்பானிய அரசால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் கொவிட் பரிசோதனைக்கு மேலதிகமாக மூன்று நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொவிட் தொற்று நோய்க்கான சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க பிரிட்டன் கடந்த தினம் தீர்மானித்திருந்தது.

எதிர்வரும் 22 ம் திகதி முதல் இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE